புதன், 23 செப்டம்பர், 2015

சாகாவரம்

சாகாவரம்

விழித்தெழ வேண்டுமென
நினைக்கும் போதெல்லாம்
தூங்கிவழிகின்றேன்.

முகிழ்த்தெழ வேண்டுமென
முயலும் போதெல்லாம்
வாடிவதங்குகின்றேன்.

சிரித்திட வேண்டுமென
சிந்திக்கும் போதெல்லாம்
அழுது தொலைக்கின்றேன்.

திறந்து விட வேண்டுமெனச்
செயல்படும்போதெல்லாம்
பூட்டி வைக்கின்றேன்.

ஈட்டுதற்கு வேண்டுமென
எண்ணும் போதெல்லாம்
செலவழித்து விடுகினறேன்.

ஆனாலும்.....
மரித்துப்போகாமல்
உயிர்த்தெழ வேண்டுமென்ற
உன்னத உந்துதலில்
ஊன்றுகோலாய் நிற்கும்
தன்னம்பிக்கை மட்டும்
சாகாவரம் பெற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக