புதன், 23 செப்டம்பர், 2015

புதியதொரு அறிமுகம்

எனக்கு முன்னே
எத்தனையோ வலைப்பதிவர்
இருந்தாரப்பா.....
இன்னுமொரு வலைப்பதிவராய்
இங்கே நான் அவதரித்தேன்!

புதிதாய்ச் சொல்வதற்குப்
புறப்பட்டேன்.......
பூக்கள் வரவேற்றன,
பட்டாம் பூச்சிகள் என்வலையில்
படபடப்பாய் வந்து போகச் சம்மதித்தன.

புத்தனல்ல நானொன்றும்....ஆசைகளைப்
புறந்தள்ளிக் கடந்துபோக,
சித்தனல்ல நானொன்றும்....வார்த்தைகளைத்
தத்துவமாய்த் தினம் பொழிய!

எனக்குள் தோன்றும்
எண்ணங்களை விதைக்க...
எழுத்து விதைகளை வித்திட
கழனியொன்று கண்டேன்,
கட்டுரைக்க வந்தேன்.

முந்தும் முத்தமிழைச்
சந்தம் கொண்டும் காட்டுவேன்...
சிந்தும் சொற்களால்
சதங்கை கட்டியும் ஆடுவேன்...

யாதும் ஊரென்றானதால்
யாவரையும்கேளிராக்கினான்
முன்பிறந்த மூத்த முப்பாட்டனுக்கும்
முப்பாட்டன்.

இனியென்ன......
இருகைகொட்டி வரவேற்பீர்!
எனையும் தத்தம்சிரமேற்பீர்!
              "இளவல்" ஹரிஹரன்
                       24-9-2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக