ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

                   காலம்


இன்று கிடைக்காது
நேற்று;
நாளையும் வாராது
இன்று;

இன்றே வாழ்ந்துவிடு
காலம் நகரும் முன்!




                         தனிமை

          பல்லியும் பாச்சாவும்
          சிலந்தியும் எறும்பும்
          போக்குகின்றன
           மனிதர்களின் தனிமையை.  


          பயணம்

நீளும் பாதையில்
பயணம் செய்ய ஆசைப்பட்டு
கால்களின்றி
நடக்கிறேன்......நடக்கிறேன்....
கால வெளியில்.


                             மாற்றம்

                இனி ஊறாது
                என்ற கிணறு
                இருப்பை மாற்றிக் கொண்டது
                ஒரு சிறு அறையாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக