வெள்ளி, 1 ஏப்ரல், 2016

                    சித்திரைச் சிறப்பு

அடுத்துவரும் ஐந்தாண்டில்
   
      ஆட்சியினை நல்லோர்

எடுத்துவரும் வாய்ப்பினை

       ஏற்க......கொடுக்கவுள

முத்தான  வாக்கை

       முறையாகப் போடுதலே

சித்திரைக்குச்  சேரும்
     
         சிறப்பு.




வஞ்சனைகள் சூதுமிக

    வாயினிக்கும்  பொய்ப்பேச்சு

நெஞ்சகத்தில் கொள்ளாமல்

     நேராய்வாழ்!....  மிஞ்சியுள

புத்தாண்டின் நாளெல்லாம்
 
      புத்துணர்வைக் கொண்டாடச்

சித்திரைக்குச்  சேரும்
 
           சிறப்பு.
                        " இளவல் "  ஹரிஹரன்.

1 கருத்து:

  1. சித்திரைச் சிறப்பு சரிதான் ,இந்த பதிவை நீங்க ஏப்ரல் ஒண்ணாந்தேதி போட்டு இருப்பதுதான் எதையோ ஞாபகப் படுத்துகிறது ஜி :)

    பதிலளிநீக்கு