செவ்வாய், 19 மே, 2020

நாச்சியார் திருமொழி!: 89.நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு

நாச்சியார் திருமொழி!: 89.நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு: 89.நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு பாடல் :89 நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான் நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவ...

சனி, 4 ஜனவரி, 2020

அக்காரக் கனிச்சுவையே

நெஞ்சத்தின் நினைவலைகள்
      நெடுந்தூரம் கொணர்ந்தனவே
நெடுந்தூரம் கொணர்ந்ததனால்
       நிலைமாறிப் போனேனே

சஞ்சலத்தில் வாழ்ந்தமனம்
       சங்கடங்கள் கொண்டதுவே
சங்கடங்கள் கொண்டதனால்
       தடுமாறிப் போனேனே

வஞ்சகத்து மூடமனம்
       வழிதவற வைத்ததுவே
வழிதவற வைத்ததனால்
       வகையிழந்து போனேனே

பிஞ்சுமனம் பித்தெனவே
       பேதலித்துப் போனதுவே
பேதலித்துப் போனதனால்
       பித்தனென வானேனே

திக்குகளே அறியாமல்
      திரிந்தலைந்து நின்றேனே
திரிந்தலைந்து நின்றதனால்
      திசைமாறிப் போனேனே

தக்கதிது வெனவறியும்
      தந்திரமும் அறியேனே
தந்திரமறி யாததனால்
       தடம்மாறிப் போனேனே

மொக்கவிழும் மலரெனவே
       முழுமனமும் கொண்டேனே
முழுமனமுங் கொண்டதனால்
        முறைமாறிப் போனேனே

சிக்கலென வருங்கவலை
        சிந்தைமிகக் கொண்டேனே
சிந்தைமிகக் கொண்டதனால்
        செயலறியா நின்றேனே

முக்காலம் உணர்ந்தவனே
        முழுவதுமாய் சரண்புகுந்தேன்
முழுவதுமாய் சரண்புகுந்த
         முறையாலே நானழிந்தேன்

இக்காலம் இக்கணமே
          எனையாள வேண்டுவனே
எனையாளும் வேண்டுவரம்
          எப்போதும் வேண்டுவனே

எக்காலம் என்றாலும்
          என்றென்றும் நின்புகலே
என்றென்றும் நின்புகலால்
          எள்ளளவும் துன்பிலனே

அக்காலம் உலகளந்த
         அற்புதனே வேங்கடவா
அக்காரக் கனிச்சுவையே
         அடியேனுக் கருள்வாயே

இளவல் ஹரிஹரன் 4-1-2020

புதன், 14 நவம்பர், 2018

தமிழ்க்குதிர்: குறள் பத்து

தமிழ்க்குதிர்: குறள் பத்து: கவிஞர் " இளவல் " ஹரிஹரன், மதுரை   சந்தக் கவியழகு சாற்றுந் தமிழழகு சொந்த மென்க்கொள்ள சுகம் சுகம்நல்குஞ் சொற்கள் சொலுங்க...

புதன், 16 மே, 2018

ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் காட்டும் வாழ்க்கை முறையும் வைணவ நெறியும்

               ஸ்ரீமந் நாயகி சுவாமிகள்
                            காட்டும்
                 வாழ்க்கை முறையும்
                  வைணவ  நெறியும்

  ஸ்ரீமந்  நடன கோபால நாயகி சுவாமிகள் சிறந்த ஸ்ரீவைணவராயும்
ஆசார குணசீலராயும் ஆன்மிக குல குருவாயும் நம்மை வழி நடத்திச்
செல்பவர்.
        தொடக்கத்தில், இளம்பிராயத்தில் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அருட்பார்வையால் வழிநடத்தப்பட, பின்
பரமக்குடி திரு நாகலிங்க அடிகளிடம் முறையே தீட்சை பெற்று
சித்துகள் கற்றார். சித்துவிளையாடல்கள் புரிந்து சித்தரெனவும்,
மகான் எனவும் புகழப் பெற்றார். சிவகங்கை அரசர் முன் சித்து
விளையாடல் காட்டி அவருக்கு அருள் செய்தார்.
           அங்கிருந்து மதுரைக்கு வரும்வழியில் பொன் பொருள்
அபகரித்த கள்வர்களுக்குக் கண்பார்வை இழக்கச்செய்து, மனம்
வருந்தித் திருந்திய கள்வர்களுக்கு மீளக் கண் பார்வை அளித்தார்.
           தேசாந்திரியாய்த் தலங்கள் தோறும் செல்கையில், ஆழ்வார்
திருநகரியில் ஸ்ரீவைணவ ஆசார்யர் வடபத்ரார்யர் சுவாமிகள்,  நடனகோபாலரதுதோற்றப் பொலிவையும் தெய்வாம்சத்தையும் உணர்ந்து இவரதுகருத்தை மடைமாற்றி ஸ்ரீவைணவத்தில் கலந்திடச் செய்தார்.
           திருவெட்டெழுத்து மந்திரம் முறையே ஓதி, கற்கச்செய்த்,
திருவிரண்டு மந்திரார்த்தங்களைப் பொருள் விளங்கச் செய்தார்.
சரம சுலோகத்தின் உடபொருளை உணர்த்தி, ஸ்ரீவைணவச்
சின்னங்கள் தாங்கச் செய்து திருவடிசம்பந்தம் ஏற்படுத்தித்
தந்தார். நடன கோபாலர் என்ற திருநாமத்தையும் இட்டார்.
            தமது ஆசார்யர் வழி பின்பற்றி, அவர் பெயர் விளங்கச்
செய்ய தம் ஒவ்வொரு கீர்த்தனையின் இறுதிப் பத்தியில் ஆச்சாரியர்
வடபத்ரார்யர் அருளிச்செய்து வழிநடத்தியதைப் பெருமிதத்துடன்
குறிப்பிட்டு தம் முத்திரை பதித்து பாடி அருளிச் செய்தார்.
            இதன் மூலம் ஆசார்யரை மறவாத விசுவாச மனோபாவத்தை
வெளிப்படுத்தி தம் குரு பரம்பரையை நிலைநாட்டினார்.
             இன்றளவும் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் அவர்களைத் தம் மானசீக குருவாக, ஆசார்யராக ஏற்று, அவர் வழி
வைணவ சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் வைணவர்கள்
ஏராளம்.
              அவர் தம் பிரபந்தக் கண்ணிகளில் அருளிச் செய்தவற்றில்
நமக்கு உரிய வாழ்க்கை வழிமுறைகளும் வைணவ நெறிகளும் நம்மவர்க்குப் பயனளிக்கும் என்ற கருத்தில் ஓர் உலக நீதியைப்
போல எது எது நம் வாழ்வில் கூடாத, வேண்டாத பழக்கங்கள்
என்பனவற்றை ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் பேரருளால் இந்நூலில்
தொகுத்தளிக்க இயன்றவரையில் முயன்றிருக்கிறேன்.
               ஸ்ரீமந் நாயகியார் வகுத்துத் தந்த வாழ்க்கை வழிகளையும்
வைணவ நெறிகளையுந் தவறாது பின்பற்றி வாழ்வில் வெற்றி பெற,
சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு பெற, செங்கண் திருமுகத்துச்
செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புற்றிருக்க,
தூமலர் தூவி வாயினால் பாடி மனத்தினால் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் திருவடிகள் சிந்திப்போமாக.
                 ஸ்ரீமந் நடன கோபால நாயகி ஸ்வாமிகள் திருவடிகள்
சரணம்.
                 எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

                                                         என்றென்றும் அன்புடன்
                                                                       அடியேன்
                                                          " இளவல் " ஹரிஹரன்.

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

புத்தாண்டு வாழ்த்துகள்

         2018 புத்தாண்டு வாழ்த்துகள்

          நண்பர்களே........
          புத்தாண்டு வாழ்த்துகளுடன் தொடங்குகிறேன்

         2017 ஏற்றங்கள் தந்தது பலவாய்...
          ஆண்டின் தொடக்கத்தில்
          பொங்கல் கவிதைப்போட்டியில் கிடைத்த
          ஆயிரம் ரூபாய் பரிசு.

          மாமதுரைக் கவிஞர் பேரவையில்
           "கவி பாரதி" விருதும் கேடயமும்.

          உரத்த சிந்தனை வெண்பா பரிசு

          மின்னல் தமிழ்ப்பணி வெண்பா பரிசு

          "முத்து கமலம் " மின்னிதழில் கவிதைக்கான பரிசு

           மாமதுரைக் கவிஞர் பேரவையில்
           "கவி மாமணி" விருதும் வெற்றிக்கோப்பையும்

            நிலா முற்றம் முக நூல் குழுவின்
            முதலாமாண்டு விழாவில்
            "கவி நிலா" விருதும் சான்றும் பரிசும்

             தினமலர்-வாரமலர் டி.வி.ஆர் நினைவுச்
             சிறுகதைப் போட்டி 2017 ல் எனது
             "இங்கேயும் சில பூக்கள் மலரும்" என்ற
               சிறுகதைக்கு முதல் பரிசு ரூ20000/-

             மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மலேயா
             தமிழ் மன்றம் நடத்திய சிறுகதை நூற்றாண்டு
             விழாவில்,
             "சிந்தனைச் சிகரம்" என்ற விருதும், சான்றும்
              துணைவேந்தர், மற்றும் தவத்திரு குன்றக்குடி
               அடிகளார் கரங்களால் தரப்பட்டது

              "இங்கேயும் ஒரு சொர்க்கம்" என்ற எனது
                சிறுகதை, மேற்படி விழா முன்னிட்டுத்
                 தொகுக்கப்பெற்ற நூறு சிறுகதைகள் 2ம்
                 தொகுப்பில் இடம்பெற்றது.

                  கவிதைப் பூங்கா முகநூல் குழுவின்
                  "கவிச்சுடர்" விருது

                 மரபுமாமணி பாவலர் வரதராசர் மரபுக்
                 கவிதைச் சோலையில் "பைந்தமிழ்ச் சுடர்"
                 விருது

               டி. எம். எஸ். நற்பணி மன்றத்தின் 31ஆவது
               ஆண்டு விழாவில் "சிறந்த எழுத்தாளர், சமூக
                சேவகர்" விருது

     எனப் பலவாறாய்க் கௌரவித்த 2017ஐ வணங்கி,
     அதற்குக் காரணமான என் பெற்றோரையும்,
      மனைவியையும், நண்பர்களையும் இணைத்து
      முழுமுதற் கடவுளை வணங்கி மகிழ்கிறேன்.

      2018ம் மேலும் சிறப்புகள் சேர்க்கும் என்ற தன்
      நம்பிக்கையில் வாழ்த்தி வணங்கி வரவேற்கிறேன்

     அன்புடன்,   உங்கள் இளவல்.

சனி, 11 நவம்பர், 2017

பயனுள்ள பொழுதுபோக்கு : திருமூலரின் கடவுள் விளக்கம்-5( அன்றும் இன்றும் )ச...

பயனுள்ள பொழுதுபோக்கு : திருமூலரின் கடவுள் விளக்கம்-5( அன்றும் இன்றும் )
ச...
: திருமூலரின் கடவுள் விளக்கம் -5 ( அன்றும் இன்றும் ) சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள CERN என்னும் அணு ஆராய்ச்சிக் கூடத்தில் சித...

பயனுள்ள பொழுதுபோக்கு :                                  திருமூலரின் கடவுள...

பயனுள்ள பொழுதுபோக்கு :                                  திருமூலரின் கடவுள...:                                   திருமூலரின் கடவுள் விளக்கம் -4                                          ( வழிகாட்டுப் பாடல்கள் ) ...