ஞாயிறு, 31 டிசம்பர், 2017

புத்தாண்டு வாழ்த்துகள்

         2018 புத்தாண்டு வாழ்த்துகள்

          நண்பர்களே........
          புத்தாண்டு வாழ்த்துகளுடன் தொடங்குகிறேன்

         2017 ஏற்றங்கள் தந்தது பலவாய்...
          ஆண்டின் தொடக்கத்தில்
          பொங்கல் கவிதைப்போட்டியில் கிடைத்த
          ஆயிரம் ரூபாய் பரிசு.

          மாமதுரைக் கவிஞர் பேரவையில்
           "கவி பாரதி" விருதும் கேடயமும்.

          உரத்த சிந்தனை வெண்பா பரிசு

          மின்னல் தமிழ்ப்பணி வெண்பா பரிசு

          "முத்து கமலம் " மின்னிதழில் கவிதைக்கான பரிசு

           மாமதுரைக் கவிஞர் பேரவையில்
           "கவி மாமணி" விருதும் வெற்றிக்கோப்பையும்

            நிலா முற்றம் முக நூல் குழுவின்
            முதலாமாண்டு விழாவில்
            "கவி நிலா" விருதும் சான்றும் பரிசும்

             தினமலர்-வாரமலர் டி.வி.ஆர் நினைவுச்
             சிறுகதைப் போட்டி 2017 ல் எனது
             "இங்கேயும் சில பூக்கள் மலரும்" என்ற
               சிறுகதைக்கு முதல் பரிசு ரூ20000/-

             மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மலேயா
             தமிழ் மன்றம் நடத்திய சிறுகதை நூற்றாண்டு
             விழாவில்,
             "சிந்தனைச் சிகரம்" என்ற விருதும், சான்றும்
              துணைவேந்தர், மற்றும் தவத்திரு குன்றக்குடி
               அடிகளார் கரங்களால் தரப்பட்டது

              "இங்கேயும் ஒரு சொர்க்கம்" என்ற எனது
                சிறுகதை, மேற்படி விழா முன்னிட்டுத்
                 தொகுக்கப்பெற்ற நூறு சிறுகதைகள் 2ம்
                 தொகுப்பில் இடம்பெற்றது.

                  கவிதைப் பூங்கா முகநூல் குழுவின்
                  "கவிச்சுடர்" விருது

                 மரபுமாமணி பாவலர் வரதராசர் மரபுக்
                 கவிதைச் சோலையில் "பைந்தமிழ்ச் சுடர்"
                 விருது

               டி. எம். எஸ். நற்பணி மன்றத்தின் 31ஆவது
               ஆண்டு விழாவில் "சிறந்த எழுத்தாளர், சமூக
                சேவகர்" விருது

     எனப் பலவாறாய்க் கௌரவித்த 2017ஐ வணங்கி,
     அதற்குக் காரணமான என் பெற்றோரையும்,
      மனைவியையும், நண்பர்களையும் இணைத்து
      முழுமுதற் கடவுளை வணங்கி மகிழ்கிறேன்.

      2018ம் மேலும் சிறப்புகள் சேர்க்கும் என்ற தன்
      நம்பிக்கையில் வாழ்த்தி வணங்கி வரவேற்கிறேன்

     அன்புடன்,   உங்கள் இளவல்.