வெள்ளி, 30 ஜூன், 2017
கவியருவி ம. ரமேஷ்: ஹைக்கூ தோட்டம் போட்டி எண் – 2 (வசந்த காலம்) - ரசித...
கவியருவி ம. ரமேஷ்: ஹைக்கூ தோட்டம் போட்டி எண் – 2 (வசந்த காலம்) - ரசித...: ஹைக்கூ தோட்டம் போட்டி எண் – 2 (வசந்த காலம்) குறித்த சிறந்த ஹைக்கூக்கள்: 1. பின்பனி இரவில் உறைந்து போயிருந்தன காதல் கிளிஞ்சல்கள் -Ilav...
வியாழன், 29 ஜூன், 2017
கஜல் கவிதைகள்
கஜல் கவிதைகள
***
வளர்பிறை நம் காதல் என்றாய்
தேய்பிறை உண்டெனச் சொல்லாமல் சொன்னாய்.
****
கண்களால் பார்க்கும் பரவசம் சொர்க்கங்கள்
கண்ணீரால் பார்த்த தருணம் நரகங்கள்
*****
கண்ணசைவில் காதல் எனக்கான வரங்கள்
கையசைவில் பிரிவின் துயரம் சாபங்கள்.
*******
அதிகாலைப் பூக்களின் பனித்துளிகள்
இரவு முழுதும் சிந்திய கண்ணீர்த்துளிகள்.
**********
கோலம் போடும் அழகை ரசிக்கவந்தேன்
காலால் அழித்து ரசனையை மறுதளித்தாய்.
*************
கவிதைகளால் காதல் வளர்ப்போமென்றாய்
கண்ணீரில் நனைந்த கவிதைகளை ரசிக்கின்றாய்.
*****************
சன்னலில் எட்டிப்பார்த்த நிலவு
கதவை அடைத்துக்கொண்டு அமாவாசையாக்கியது.
*********************
வெற்றிபெறும் போதெல்லாம் துள்ளிக்குதித்தாய்
காதல் தோல்வியை நிரந்தரமாக்கினாய்.
*************************
உச்சத்தைத் தொட்டதாய் காதல் தந்தாய்
உயர ஏற்றிவிட்டுத் தள்ளிவிட்டாய்.
********************************
மெல்லக்கொல்லும் விடமாய் உன் நினைவுகள்
மிடறு மிடறாய் விழுங்கிக்கொண்டிருக்கின்றேன்
*************************************
பந்தயம் வைத்து வெற்றி பெற்ற காதல்
பரிகாசம் செய்யவே பிரிந்து போனாய்.
*******************************************
அடைமழை அடர்த்தியில் நனையவைத்தாய்
குடைபிடிக்காமலேயே கண்ணீரில் நனையவைத்தாய்
************************************************
பிரியத்தான் காதலிததோமா
காதலிக்கத்தான் பிரிந்தோமா
விடைதெரியாமல் இங்குமங்கும் தவிக்கின்றோம்.
**************************************************
கவிஞர் "இளவல்" ஹரிஹரன், மதுரை
98416 13494
***************************************************
***
வளர்பிறை நம் காதல் என்றாய்
தேய்பிறை உண்டெனச் சொல்லாமல் சொன்னாய்.
****
கண்களால் பார்க்கும் பரவசம் சொர்க்கங்கள்
கண்ணீரால் பார்த்த தருணம் நரகங்கள்
*****
கண்ணசைவில் காதல் எனக்கான வரங்கள்
கையசைவில் பிரிவின் துயரம் சாபங்கள்.
*******
அதிகாலைப் பூக்களின் பனித்துளிகள்
இரவு முழுதும் சிந்திய கண்ணீர்த்துளிகள்.
**********
கோலம் போடும் அழகை ரசிக்கவந்தேன்
காலால் அழித்து ரசனையை மறுதளித்தாய்.
*************
கவிதைகளால் காதல் வளர்ப்போமென்றாய்
கண்ணீரில் நனைந்த கவிதைகளை ரசிக்கின்றாய்.
*****************
சன்னலில் எட்டிப்பார்த்த நிலவு
கதவை அடைத்துக்கொண்டு அமாவாசையாக்கியது.
*********************
வெற்றிபெறும் போதெல்லாம் துள்ளிக்குதித்தாய்
காதல் தோல்வியை நிரந்தரமாக்கினாய்.
*************************
உச்சத்தைத் தொட்டதாய் காதல் தந்தாய்
உயர ஏற்றிவிட்டுத் தள்ளிவிட்டாய்.
********************************
மெல்லக்கொல்லும் விடமாய் உன் நினைவுகள்
மிடறு மிடறாய் விழுங்கிக்கொண்டிருக்கின்றேன்
*************************************
பந்தயம் வைத்து வெற்றி பெற்ற காதல்
பரிகாசம் செய்யவே பிரிந்து போனாய்.
*******************************************
அடைமழை அடர்த்தியில் நனையவைத்தாய்
குடைபிடிக்காமலேயே கண்ணீரில் நனையவைத்தாய்
************************************************
பிரியத்தான் காதலிததோமா
காதலிக்கத்தான் பிரிந்தோமா
விடைதெரியாமல் இங்குமங்கும் தவிக்கின்றோம்.
**************************************************
கவிஞர் "இளவல்" ஹரிஹரன், மதுரை
98416 13494
***************************************************
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)